திருநிலவும் துர்முகி பெருகுபிறை துவாதசியில்
நிறைபனி சேர்தைத் திங்கள் மிருகசீரிடம் – அறிவொளிசேர்
பரமேஸ்வரி எனும் பாசமிகு தாய் சேர்ந்தாள்
வரமருளும் துர்க்காபதமே தேர்ந்து. ( Ver. 1)
பனிபடர்ந்த தைத்திங்கள் பார்போற்றும் துர்முகியில்
வான் நிலவு வளர்பிறையில் வண்மைமிகு துவாதசியில் – தன்னலமில்
கனிவான தாயான கருணைப்பரமேஸ்வரி கறைகண்டன்
துணையான துர்க்கைபதம் சேர்ந்தாள் எனச்செப்பு. ( Ver. 2)